HebeSec Technologies என்பது ஒரு சைபர் செக்யூரிட்டி பயிற்சி மற்றும் சேவை நிறுவனமாகும், இது டேட்டாவைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு மேம்பாட்டுத் தீர்வுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது. எங்களிடம் நிபுணத்துவம் உள்ளது மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு சேவை செய்துள்ளோம். HebeSec Technologies 2019 இல் சிறிய நிறுவனமாக உருவாக்கப்பட்டது, கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நிறுவனத்தில் சைபர் பாதுகாப்பின் காலத்தை அணிதிரட்ட வேலை செய்கிறது. சைபர் கிரைம், டேட்டா உளவு மற்றும் ஆன்லைன் அவதூறுக்கு எதிராக போராடுவதற்கு கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களிடம் ஆலோசனை செய்யத் தொடங்கினோம். மற்றும் சைபர் பாதுகாப்பு. உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் நிலையான நடைமுறையைப் பின்பற்றுகிறோம். HebeSec – ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மிகவும் சக்திவாய்ந்த சுயவிவரத்துடன், 2020 இல், பெரிய அல்லது சிறிய அனைத்து முக்கியமான பாதிப்புகளைக் கண்டறிய எங்கள் நிலையான மற்றும் சரிபார்க்கப்பட்ட அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு தீர்வு மற்றும் சேவைகளை வழங்கத் தொடங்கினோம்.

கடிகாரத்தின் ஓட்டத்தை மிஞ்சிக் கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப உலகில்,  மனித வாழ்வின் பிரிக்க முடியா அங்கமாய் உருவாகியிருக்கிறது இணையம். தவழும் குழந்தை முதல் தள்ளாடும் வயதினர் வரை அனைவரையும் தன்னுள் அடைக்கிவிடுகிறது இந்த இணையம். இணையத்தின் பயன்  எத்தனை எத்தனையோ! இருப்பினும், நாணயத்தின் இருப்  பக்கங்களாய் தீதும், நன்றும் சேர்ந்தே வருவது வழக்கமல்லவோ?! 

இணையத்தில் இருக்கும் அபாயங்களில்  ஒன்று தரவுதிருட்டு(data theft). இணையங்களிலும், சமூக வலைதளங்களிலும் தினமும் நடக்கும் அவலமே இந்த தரவு திருட்டு. 

 தீதுக்காய் நன்மையை இழக்க முடியாத சூழலில் அத்தீமையை தடுக்கும் பொருட்டு நாம் பயன்படுத்துவதே காரைக்குடியில் சைபர் பாதுகாப்பு பற்றிசைபர் பாதுகாப்பு “. சைபர் பாதுகாப்பு – ‘இணையத்தை மற்றும் இணையத்தில் இணைய நாம் உபயோகிக்கும் சாதனங்களையும் பாதுகாப்பது’. 

இணையத்தை உபயோகிக்கும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய இந்த ‘சைபர் பாதுகாப்பு’, இங்கு நூற்றில் ஒருவருக்கு தெரிந்திருந்தால் அதிசயமே! 

           “இணையத்தில் இதுவரையிலும் அபாயங்களை நான் சந்திக்காத போது சைபர் பாதுகாப்பின் தேவை என்னவோ? “

ஆபத்துகள் என்றும் சொல்லிக்கொண்டு வாரா. நாம் அறியா வண்ணம் நடப்பதாலே அதை அபாயம் என்கிறோம். தவறுகளைத் தாண்டி விழிப்புணர்வுயின்மையே இங்கு பல ஆபத்துகளை தருகிறது. விழித்துக்கொண்டு, பிழைத்துக்கொள்வோம்! 

— பிரியங்காதேவி–
தமிழ் பதிப்பு ஆசிரியர்